×

நடிகர் ஜெயசூர்யா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயசூர்யா. இவர் தமிழில் கமலுடன் வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கொச்சி கடவந்திரா பகுதியில் வீடு ஒன்றை கட்டினார். அந்த வீடு ஏரியை ஆக்கிரமித்து கட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கொச்சியை சேர்ந்த கிரீஷ் பாபு, மூவாற்றுபுழா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணையில், நடிகர் ஜெயசூர்யா ஏரியை ஆக்ரமித்து வீடு கட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. இந்தநிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடிகர் ஜெயசூர்யாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Jayasuriya ,
× RELATED பெரியபாளையம் அருகே ப்ளஸ் 1 தேர்வில்...